tag:blogger.com,1999:blog-9101491010187407602.post7535483090989309036..comments2023-06-05T18:21:28.523+05:30Comments on நீதியின் குரல்: மாலேகான் குண்டுவெடிப்பு: லெப்டினென்ட் கர்னல் கைது!M. Hussainghani.http://www.blogger.com/profile/17171850901241371917noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9101491010187407602.post-20446690947439624172008-11-11T13:03:00.000+05:302008-11-11T13:03:00.000+05:30//"இதை இந்துத் தீவிரவாதம் என்று இந்து மக்களை கொச்ச...//"இதை இந்துத் தீவிரவாதம் என்று இந்து மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்துத்துவா தீவிரவாதம் என்பதே சரி"// சகோ பரித் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<BR/>விமர்சனங்களில் இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தும்போது உங்களைப் போன்றே நமக்கும் அந்த நெருடல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஒரு வலியை உணரும்போது தான் அதன் வேதனை தெரியும் தாங்கள் எழுதியுள்ள விமர்சனத்திலேயே பதிகள் உள்ளன. இது வரை குண்டு தயாரிப்பதும் அதை பயண்படுத்துவதும் முஸ்லீம்கள் தான் என்றும் தீவிரவாதம் என்றால் அது இஸ்லாமிய தீவிரவாதம் தான் என்றும் ஊடங்கள் மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தம் கொடுத்து ஊதி வந்தன. இப்போது அதே பதத்தை நாம் சொல்லும் போது ராமகோபாலன்களுக்கு வந்த வேதனைகளை குமுதத்தில் பார்த்தேன். இந்து தீவிரவாதம் என்ற சொல்லில் நமக்கு உடன்பாடில்லை ஆனால் அவர்களை திருத்த "இந்து தீவிரவாதம்" என்ற சொல்லை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறோம். என் சமுதாயத்தைச் சொல்லும் போது ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கிக் தலைகுணிந்ததே அதன் வலி அவர்களுக்கும் தெரியட்டும்.நீதியின் குரல்https://www.blogger.com/profile/04687694996740338598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9101491010187407602.post-58150772925992479722008-11-11T12:11:00.000+05:302008-11-11T12:11:00.000+05:30நாட்டில் எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அரை மண...நாட்டில் எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அரை மணிநேரத்தில் 'இது பாகிஸ்தான் சதி, இது பங்களாதேஷ் சதி, இது சிமி' என்று நாகூசாமல் ஒரு சார்புடன் எந்த முகாந்திரமும் இல்லாமல் எந்த விசாரணையுமில்லாமல் அம்மாநில போலிசார் கூறுவதும். உடனே கண் காது மூக்கு வைத்து முதல் பக்கத்தில் நான்கு நாளைக்கு 'முஸ்லிம் தீவிரவாதிகள் கைது திடுக்கிடும் தகவல்; பின்லேடனுடன் ஒன்றாக அமர்ந்து திட்டம் தீட்டியவர் கைது; அது இது என்று' பத்திரி்க்கை தர்மத்தை காலில் போட்டு மிதிக்கும் பத்திரிக்கைகள் எழுதுவதும் இத்தகைய பாரதூர விளைவை ஏற்படுத்தியிருக்கிறகது.<BR/><BR/>எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் முஸ்லிம்கள், தாடி வைத்தவர்கள் என்ற காரணத்திற்காக கைதுசெய்யப்படும் போது உண்மைக் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர். இதுதான் இதுநாள் வரையிலும் நடந்து வரும் உண்மைகளாகும். இதனால் இந்த பயங்கரவாதிகள் சர்வசாதாரணமாக தங்கள் நாசவேலைகளை நிகழ்த்தி கொண்டு மக்களோடு மக்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.<BR/><BR/>பல சமயங்களில் கையும் களவுமாக வெடிகுண்டுகளுடனோ அல்லது அதை தயாரித்துக் கொண்டிருக்கும்போதோ சங்பரிவாரத்தினர் பிடிபட்ட போதும் அவர்களை கண்டும் காணாது போல் இருந்த போலிஸ், செய்திகளை உள்பக்கத்தில் சின்ன கட்டத்தில் வேண்டா வெறுப்புடன் வெளியிட்டு தங்கள் பத்திரி்க்கை தர்மத்தை நிலைநாட்டிய (தமிழக) பத்திரிக்கைகள் கொடுத்த ஊக்கத்தின் விளைவே இது.<BR/><BR/>ஒரு சாமானியனுக்கு தெரியும் இந்த அறிவு கூட இல்லாத மானங்கெட்ட மத்திய மாநில அரசுகள். வெட்டிச்சம்பளம் வாங்கும் உளவுத்துரையினர் முஸ்லிம்களையே வேட்டையாடி வருவது கண்டிக்கத் தக்கது.<BR/><BR/>இதை இந்துத் தீவிரவாதம் என்று இந்து மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்துத்துவா தீவிரவாதம் என்பதே சரி. இந்த தேசவிரோதிகள் ராணுவத்தில் இருந்தால் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது வெறும் வெற்றுக்கோஷமாகிவிடும்.<BR/><BR/>சங்பரிவார வகையராக்களை உடனடியாக தேசவிரோதிகள் என்று அறிவித்து தடைசெய்ய வேண்டும். குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட்டால் ஒரே மாதத்தில் இந்தியா அமைதி தேசமாகிவிடு்ம்.Anonymousnoreply@blogger.com