.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, June 13, 2011

வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் ரியாத் மாநகரில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் தமுமுக கோரிக்கை.


அதிமுக சார்பில் சவூதி அரேபியா - ரியாத் நகரில் முப்பெரும்விழா நடைபெற்றது. அதிமுகவின் அம்மா பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற முதல்வருக்கு பாராட்டு விழா – தேர்தல் வெற்றி விழா – வாக்காளருகளுக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 10-06-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரியாத் நகர் பத்தாவிலுள்ள கிளாசிக் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது

இவ்விழாவிற்கு கொரடாச்சேரி கோவி. சந்துரு (இணைச்செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) தலைமை தாங்கினார். காட்டுமள்ளுர் கோயில் அன்பு என்கிற அன்பழகன் (தலைவர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) முன்னிலை வகித்தார். முகவை ராஜன் என்கிற ராஜேந்திரன் வரவேற்புரை வழங்க, கடையநல்லூர் SM.மைதீன் (செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் கூட்டணி கட்சி என்ற வகையில் சிறப்பு விருந்தினார்களாக மனித நேய மக்கள் கட்சியின் தாய்க்கழகமான தமுமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூசைன் கனி மற்றும் ரியாத் மத்திய மண்டல துணைப் பொதுச் செயலாளர் மீமிசல் OMS. நூர் முஹம்மது ஆகியோர் சமுதாயத்தின் கோரிக்கைகளான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட கட்டாயத் திருமணச் சட்டத்தில் உள்ள குளறுபடிகள் மேலும் முஸ்லிம்கள் காலம் காலமாக முஸ்லிம் ஜமாஅத்களில் நடத்தி வரும் திருமணங்களை அரசு அங்கீகரித்து ஜமாஅத் அல்லது காஜியின் பதிவேட்டை அரசு பதிவாக ஏற்று முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளில் அரசு அதிகாரிகள் தலையிடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அதிமுக அரசை இந்த சமுதாயத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு உடலாலும் பொருளாலும் உழைத்திட்ட வாக்களர்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளையும் தங்களின் முப்பெரும் விழா தீர்மானத்தில் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


------------

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தமுமுக மண்டலப் பொதுச் செயலாளர் ஹூசைன் கனி கூறியதாவது
சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தில் வடநாடு மற்றும் தமிழகத்தின் அன்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்களது குறைகள் மற்றும தேவைகள் சம்பந்தமாக தூதரகத்தை தொடர்பு கொண்டால் மொழிப் பிரச்சனையால் தமிழர்களின் குறைகளும் தேவைகளும் தீர்த்து வைக்கப்படுவதில்லை. அயல்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவரும் தமிழர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகளோ அல்லது பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களோ கிடையாது. தமிழத்தை தவிர வேறொன்றும் தெரியத நிலையில் அவர்களின் குறைகளை தூதரகங்களில் முறையாக எடுத்துச் சொல்லி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பிரிவு உறுவாக்கவும் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் அதிமுக அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்வதோடு, வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைகளை களைவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்குகளை களைந்து நீதமுடன் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ள ஆவன செய்யவேண்டும் என்று இந்த அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Wednesday, June 8, 2011

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

"சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்" என்று இன்று காலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம். அதற்கு முகநூலில் பதிலளித்திருக்கும் பிஜேயின் ரசிகர்பட்டாளங்கள், தலைவன் எவ்வழியோ அவ்வழியை தவறாமல் கடைப்பிடிக்கும் தொண்டன்கள் அல்லவா? இந்த ரசிகர்கள் கூடட்டம். கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் அர்ச்சனை செய்துள்ளார்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இதைப்பார்த்தவுடன் அவர்களின் அளவுக்கு அதே டென்சனில் பதில்வரும் என்று... அதுததான் இல்லை! அவர்களை பயிற்றுவித்தவரிடம் சில காலம் இருந்திருந்தாலும் நல்ல தலைவர்களின் வழிகாட்டலின் பாசரையில் பயின்றவர்கள் நாம். மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். கிரிமினல், திருட்டு, குறுக்குவழி போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் நமக்குக்கிடையாது.

அந்த அர்ச்சனைகளைப் படித்தவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம்.... நன்மைகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடியவை அல்ல. அவர்களின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்குப் பகரமாக நமக்கு மறுமையில் நன்மையாக மாறும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நான் ஒரு முஸ்லிமாக நிச்சயமாக அவர்களை நான் மறுமையில் சந்திப்பேன் அப்போது என்னைப் பற்றிய கீழ்த்தரமான வார்த்தைக்கு இன்ஷா அல்லாஹ் கணக்குத் தீர்த்துக் கொள்வேன்.

நாம் எடுத்து வைத்துள்ள நியாயமான கேள்விக்கு அவர்களின் பதிலை பாருங்கள்... அதுவும் மனிதநேயர் மக்கள் கட்சி என்ற பெயரில் ID

பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது தனது அமைப்பையோ தன்னைப் பற்றிய அடையாளமோ தெரியாமல் போலி பெயர்களில் விமர்சியுங்கள் என்று அனுமதி அளித்து TNTJ தலைமை தனது கிளைகளுக்கு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு.....

பாருங்கள் இவர்களின் அயோக்கியத்தனத்தை....

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமுமுக மற்றும் மமகவின் மீது சேற்றை வாரி இறைப்பதையே தனது முழு நேரப்பணியாக செய்துவரும் பிஜே அவர்கள் சமீத்தில் "வடமரைக்காயர் அலுவலகம் யாருக்குச் சொந்தம்? நடந்தது என்ன? சட்டமன்ற போராட்டம் ஏன்?" என்றும் அதற்கு பல காரணங்களையும் கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தரமான யூத பாசிச வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் இவரின் பிதற்றல்களுக்கு அமைதியாக இருப்பது போல் இருந்து விட்டோம். ஆனால் தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் ஒரு அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல் சித்தரிக்க முயலுவதால் இந்த பதிவு இடவேண்டிய கட்டயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரியாத் மத்திய மண்டல தமுமுக அலுவலகத்தில் சவூதி அரேபியா அணைத்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் தமுமுக நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் மற்றும் சொந்த அலுவலகம் பற்றி ஆலோசனைகள் செய்து ஒட்டு மொத்த வளைகுடா மண்டலங்களும் சேர்ந்து அதற்கான நிதிகளை வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த நமது சமுதாய மக்களிடம் வசூலித்து மேற்றகண்ட திட்டங்களை நிறைவேற்றுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்காக வசூலித்து வாங்கிய சொத்துக்களில் 7 வடமரைக்காயர் அலுவலகமும் அடங்கும்.

அன்றைய காலகட்டத்தில் தமுமுகவிற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. திமுகவின் ஆட்சி காலம் அது, முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட காலகட்டம். வீரியமாக பல போராட்டக்களங்களை தமுமுக முன்னெடுத்துச் சென்ற நேரம் அது. அதன் எதிரொலியாக தமுமுக தடைசெய்யப்பட்டுவிடுமோ எனும் அளவிற்கு அரசின் நெருக்கடிகள் இருந்தநேரம் அது.

தமுமுகவிற்கு வாங்கும் சொத்துக்களை தமுமுகவின் பெயரில் பதிவு செய்யாமல் ஒரு அறக்கட்டளை உறுவாக்கி அந்த அறக்கட்டளைக்கு அப்போது தமுமுக வின் மாநில அமைப்பாளராக பொருப்புவகித்த தொண்டியைச் சேர்ந்த பீர்முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படிடையில் அவரை சேர்மனாக நியமித்து சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமுமுகவை விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் போது தமுமுகவின் சொத்துக்களில் சிலவற்றையும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக உறுவாக்கப்பட்ட உணர்வு வார இதழையும் கலவாடிச் சென்றுவிட்டார்.

ஆண்டுகள் பல ஆனபிறகும் திருந்துவார் என்பதற்காக சில ஆதாரங்களை கண்ணியம் கருதி வெளியிடாமல் இருந்தோம். இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் ஏறிவுள்ளது.

பீர் முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால்...
  • *வளைகுடா நிர்வாகிகளால் வசூலித்த பொருளாதாரத்திலிருந்து தான் அந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டன.
  • *தமுமுகவின் பெயரைச் சொல்லி தமுமுகவிற்காக மட்டுமே வசூலித்த ஆதாரங்களை வெளியிடுவோம். அவரது உரைகள் உட்பட.
( இவர் மார்க்க பிரச்சாரம் செய்யும் பேச்சாளர் என்ற காரணத்தால் இவரது அயோக்கியத்தனம் மேலும் வெளியில் தெரிந்தால் மார்க்கத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்ற உயர்ந்த நோக்கில் இது வரை மக்கள் மத்தியில் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இப்பவும் நாம் பொறுமை காக்கிறோம்.

SM பாக்கரின் INTJ என்ற பெயரை நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்தது போல் இந்த உலகத்தில் வேண்டுமானால் தனது கிரிமினல் புத்தியாலும் நாவன்மையாலும் வேஷம் போட்டு தப்பி விடலாம் நாளை மறுமையில் ஏகஇறைவனின் நீதிமன்னறத்தில் இறைவனின் பிடி கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்...