.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, August 21, 2010

மரங்களை வெட்டுங்கள்..



மரங்களை வெட்டுங்கள்..
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Thursday, August 12, 2010

போதை: ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு...

விபத்து என்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடும்தான் என்றாலும், அது வாழ்நாளுக் கும்மறக்காது. கண்ணகிக்கு நடந்ததோ பயங்கரத்தின் உச்சம். ஆறு மாதக் கைக் குழந்தையுடன் காரின் மீது தூக்கி எறியப் பட்டு, 1 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, உயிர் பிழைத்திருக்கும் கண்ணகியின் கதி இது!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த உமாபதி, ஒரு கார்பென்டர். கண்ணகி, இவரது மனைவி. நான்கு வயதுப் பையன் சாரதி மற்றும் ஆறு மாதக் கைக் குழந்தை சௌமியா ஆகியோருடன் மனைவியின் ஊரான மணவூருக்குச் சென்று பைக்கில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார் உமாபதி. அப்போதுதான் அந்தக் கொடுரம் நடந்தது.

"நாங்க திருமுல்லைவாயில் சி.டி.ஹெச். ரோட்டுல வந்துட்டு இருந்தோம். பைக்ல எனக்கு முன்னாடி பையன் உட்கார்ந்து இருந்தான். பின்னாடி என் மனைவி குழந்தையைக் கையில் வெச்சுக்கிட்டு உட் கார்ந்திருந்தா. நான் நார்மலான வேகத்தில்தான் ஓட் டிட்டு இருந்தேன். திடீர்னு எங்களுக்கு எதிர்ல ஒரு கார் வேகமா வந்தது. நான் வண்டியைக் கொஞ்சம் ஓரமா ஓட்டினேன். ரோட்டுல நிறைய இடம் இருந்தும் கார் எங்களை நோக்கிப் புயல் வேகத்தில் வந்தது. நான் ஹெட்லைட்டைப் போட்டு 'இதுக்கு மேல் எங்கேயும் போக முடியாது'ன்னு சிக்னல் காட்டுறேன். ஆனா, கார் நேரா வந்துட்டு இருக்கு. அதுக்கு மேல் வண்டியை லெப்ட்லயும் திருப்ப முடியாது. ஏன்னா, அந்தப் பக்கம் பெரிய கால்வாய் இருக்குது. எதிர்ல வந்த கார் கொஞ்சம்கூட வேகம் குறையாம ஸ்பீடா வந்து பொட்டேர்னு வண்டியில மோதுச்சு.

மோதுன வேகத்துல நானும் முன்னாடி உட் கார்ந்திருந்த என் பையனும் அந்தப் பக்கம் போய் தனியா விழுந்துட்டோம். கொஞ்ச நேரம் எதுவுமே புரியலை. 'நாம செத்துட்டோம், நம்ம பொண்டாட்டி புள்ளை எல்லாம் அநாதையாகிடுச்சு'ன்னு தோணுச்சு. கண்ணைத் திறந்தா, பையன் தலையில் அடிபட்டு என் பக்கத்துலயே கிடக்கான். பொண் டாட்டியையும் குழந்தையையும் காணலை. எதிர்ல பார்த்தா எங்களை மோதின காரோட டாப்ல என் மனைவியும் குழந்தையும் கிடக்காங்க. கார் நிக்காமப் போய்க்கிட்டே இருக்கு. என் வண்டி காருக்கு இடை யில மாட்டிக்கிட்டு ரோட்டுல இழுபட்டுக்கிட்டே போகுது. வண்டியில இருந்து நெருப்பு பறக்குது. காருக்கு மேல கிடந்த என் மனைவி அப்படியே வழுக்கிக்கிட்டு காரோட பின்பக்க டிக்கிக்கு வந் துட்டா. குழந்தை மட்டும் காரோட டாப்ல கிடக்கு. ஒரு கையால குழந்தையைப் பிடிச்சுக்கிட்டு தானும் கீழே விழாம என் மனைவி தள்ளாடிக்கிட்டு இருக்கா. ரோட்டுல போற, வர்றவங்க எல்லாரும் கத்துறாங்க. ஆனா, அப்பவும் அந்த கார் கொஞ்சம் கூட வேகம் குறையாம தாறுமாறா போய்க்கிட்டு இருக்கு. நான் கத்தினதைப் பார்த்துட்டு யாரோ ஒருத்தர் என் பையனை ஒரு ஆட்டோவுலயும், என்னை ஒரு ஆட்டோவுலயும் ஏத்தி, கார் போன ரோட்டுலயே அனுப்பிவெச்சார். கிட்டத்தட்ட 1 கி.மீ. தூரம் போய்ப் பார்த்தா அங்கே ஒரு பிளாட்ஃபாரத்துல கார் மோதிக் கிடக்கு. என் மனைவியும் குழந்தையும் கீழே விழுந்து அடிபட்டுக் கிடக்காங்க" - உதடுகள் துடிக்க விவரிக்கிறார் உமாபதி.

இவர்களை மோதிவிட்டு நிற்காமல் பறந்த கார், கொஞ்ச தூரத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த கண்ணன் என்பவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தது. காரின் மீது ஒரு பெண் ணும் குழந்தையும் பதறித் துடிப்பதைப் பார்த்ததும் இளைஞர்கள் சிலர் டூ-வீலரில் காரைத் துரத்தி இருக் கின்றனர். அதில் ஒருவர் வேகமாக வந்து காரின் மீது இருந்த குழந்தையை மட்டும் லாகவமாகத் தூக்கி காப் பாற்றிவிட்டார். அதன் பிறகும் நிற்காத கார், கடைசி யில் ஆவடி டேங்க் ஃபேக்டரி அருகே இருந்த பிளாட்ஃபாரத்தில் மோதி நின்றது. டமால் என்று மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டார் கண்ணகி. பெருங்கூட்டமாக ஓடிவந்த மக்கள் கோபத்தில் அந்தக் காரை அடித்து தலைகுப்புறக் கவிழ்த்தார்கள்.

கடுமையான போதையில் காரை ஓட்டியவர், திருநின்றவூர் வளர்மதி நகரைச் சேர்ந்த சிவா என்ற இன்ஜினீயர். அவருடன் வேப்பம்பட்டைச் சேர்ந்த ரமணா என்பவரும் காரில் இருந்திருக்கிறார். மக்க ளின் கோபத்தில் சிக்கி அடித்து நொறுக்கப்பட்ட இவர்கள் இப்போது சிறையில் இருக்கின்றனர்.

"அவங்க பாட்டுக்கும் போதையைப் போட்டுட்டு மோதிட்டுப் போயிடுவாங்க சார். நான் குடும்பத்தோடு அடிபட்டுக்கிடக்கேன். ஏதோ ஹெல்மெட் போட்டுஇருந்ததால், உயிர் தப்பிச்சேன். என் பொண்டாட்டிக்கு உடம்பு முழுக்க எலும்பு முறிவு. ரெண்டு குழந்தைகளுக்கும் தலையில அடி. எனக்கு கால், இடுப்பு, முதுகு எல்லா இடத்துலயும் அடி. எல்லோரையும் அட்மிட் ஆகச் சொல்றாங்க. எல்லோரும் ஆஸ்பத்திரியில இருந்தா ஒண்ணும் பண்ண முடியாதே. அதான் மத்தவங்களைச் சேர்த்துட்டு நான் மட்டும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கலாம்னு இருக்கிறேன்.

நான் கார்பென்டர் வேலை பார்க்குறேன் சார். வேலைக்குப் போனாத்தான் அன்னிக்கு சாப்பாடு. இடிச்சுத் தள்ளிட்டு அவங்க பாட்டுக்கும் போயிட்டாங்க. இதுவரைக்கும் யாரும் என்னான்னுகூட எட்டிப் பார்க்கலை. இருக்கிற நிலைமையைப் பார்த்தா இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஆஸ்பத்திரி யைவிட்டு எங்கேயும் போக முடியாதுபோல. என்ன பண்றதுன்னு புரியலை" - வேதனையின் சொற்கள் வெளிப்படுகின்றன உமாபதியிடம் இருந்து.

இப்போது, இந்த நிமிடம்கூட எத்தனையோ பேர் உடல்கொள்ளாப் போதையுடன் 'அதெல்லாம் போயி டலாம்' என டூ-வீலரையோ, காரையோ ஓட்டத் தொடங்கி இருப்பார்கள்.

போதை... ஏதும் அறியா அப்பாவிகளின் வாழ்க்கை யையும் சிதைக்கிறது என்பதை உணர்வீர்களா?

நன்றி: விகடன்

பாரதி தம்பி
படம்: 'ப்ரீத்தி' கார்த்திக், ஓவியங்கள்:ஹரன்

Thursday, August 5, 2010

நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்!

சிந்தனைக்கு சில...!
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்

பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

- ...சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.

பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.

எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.

யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.

அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.

உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்

வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.

உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்றவனாவான்.

தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்
சமாதானப்படுத்த முயல வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்

சமுதாயம் தழைத்தோங்க வாரி வழங்கிடுங்கள்:


பிரிண்ட் செய்ய விரும்புவோர் இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளவும்.

Wednesday, August 4, 2010

‘We’ not ‘They’ are looting waqf properties | TwoCircles.net

‘We’ not ‘They’ are looting waqf properties

By Rehan Ansari, TwoCircles.net,

[Part 3 of Special Series on waqf properties in Maharashtra]

Mumbai: In June 1798, Nawab Ayaz Ali Khan might not have donated a garden of 1549 Sq.Mt. for a burial ground if he knew that it will not be used for the purpose and later trustees will sell a part of it because they are unable to bear the maintenance charges.

There are many waqf properties in Maharashtra, and in the entire country, which have been sold by Muslim trustees themselves for personal gains. Take some cases from Maharashtra in brief:



Hebat Jung Masjid, Patna [TCN Photo: Mudassir Rizwan]

Nearly 1100 Sq.Mt. waqf land, registered under Bombay Public Trust Act as B-96 and in Maharashtra Wakf Act, 1995, MSBW/MUM/-87/-08 was sold to a builder for redevelopment for Rs.11 lacs and 2 flats of 560 Sq.Ft.

The story in Kausa, Mumbra of Thane district is very interesting. About 52 acres of wakf land was leased to a Non-Muslim farmer and he used to farm there for the last 50 years. He used to donate one third of his earning to the mosque but when he fell ill and thought he will die he returned the land to the trust.

Locals alleged that Trustees have sold the property worth Rs 280 crore for a meager amount through which they are earning only Rs.18000 per month.

Whereas Chief Trustee Abdul Gani denied that the trust had so much property. He said, “We have leased this property to one Azaad Ghare, and he had sub leased it to others for which we have no information.”

Locals complained it to the Wakf Board, met with the Wakf Minister, Mr. Arif Nasim Khan and then with the Chief Minister of Maharashtra Mr. Ashok Chavan with all the proof but in vain.

The Wakf Board CEO, Mr. S.S. Ali Qadri first issued NOC and after the complaint then reissued notice to stop the work on the wakf land but locals alleged that the signature on both the documents is different.

Besides, the 221 Sq. Yard land having C.S.NO. 791 of Moosa Haji Hasham Charitable Trust PTR No. B-352 (Mumbai) is situated at Khetwadi, Girgaum. It has Ground plus one floor structure having 8 shops and 9 rooms which are all rented. This was sold for Rs. 83 lacs to Shri Jethmal Jain.

Sayaadi Abdul Kadir Hakimuddin Saheb Fateha Trust PTR No. B-1092 (M) sold its property bearing C.S.NO. 1252 which is of 126 Sq.Yard. The Trust sold it for Rs.15 lacs to Sterling Enterprises. The property is recorded in Schedule 1. It is a Ground plus 3 story building and in a dilapidated condition.
According to the Wakf Act 1995 all the B’ Series wakf properties automatically comes under the Wakf whether registered with the wakf board or not.

Asia’s largest tower is coming up on the wakf land at Churni Road, South Mumbai. Sources have also told that Haji Zakariya Haji Ahmed Patel Trust has sold its wakf property in Malad, a western suburb of Mumbai. A wakf property in Sewri, an eastern suburb, has also been sold.

300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு




வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது.

தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர்  உமரி

மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி

Sunday, August 1, 2010

உங்களது வாக்கை பதிவு செய்யவும்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதில் உள்ள இணைப்பை http://twocircles.net/polls/tcn_person_year_2010.html கிளிக்கி அதில் வரும் பக்கத்தில் உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


- நீதியின் குரல்