.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, July 27, 2009

குடும்பங்களைக் கூறுபோடும் லேகிய டாக்டர்கள்

குறிப்பு: இந்தக்கட்டுரை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைக்காகவுமே தவிற கிளுகிளு அல்ல நமது நோக்கம். விகடனில் படித்தது நீதியின் குரல் வாசகர்களுக்காக....
________________________________________________
'இளமை இதோ இதோ!' என்று சிறகு அடித்துப் பறக்கும் பருவத்தில்தான் மனதை உருட்டிப் புரட்டும் சஞ்சல சுனாமியும் இளைஞர்களைப் பாடாய்ப்படுத்தும். சமயங்களில் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத 'உடல் இயக்கச் சிக்கல்'களை அவர்கள் மனம் திறந்து பேசுவது 'அஜால் குஜால்' வார்த்தைகளில் ஊரை ஏமாற்றும் போலி லேகிய வியாபாரிகளிடம்...

27 வயது சந்திரசேகருக்கு இளமைப் பருவத்துக்கே உள்ள விடலைப் பழக்க வழக்கங்கள் உண்டு. ஒருநாள் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்துப் பதறுகிறார். தனது திறமையைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் செல்கிறார். முதல் அனுபவம் பெரிய ஏமாற்றமாக முடிய... யோசிக்காமல் விளம்பரத்தில் வசீகரித்த வைத்தியரிடம் ஓடுகிறார். 'ஸ்பெஷல் செட்' என்று டப்பா நிறைய கேப்சூல்களைக் கொடுத்து 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார் வைத்தியர். வருடக் கணக்கில் மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டில் சந்திரசேகருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்துகொள்கிறார்.

அந்த லாரி டிரைவரின் மனைவிக்கு 'கணவன் தன்னைப் போதுமான அளவுக்கு திருப்திப்படுத்துவது இல்லை' என்று ஆதங்கம். கணவனை செவ்வாய்க்கிழமை அந்தக் குறிப்பிட்ட லாட்ஜுக்கு அழைத்துச் செல்கிறார். லாரி டிரைவரே மேற்கொண்டு தொடர்கிறார்... ''அந்த டாக்டர்(!) என் சம்சாரம் முன்னாடியே என்னை நிர்வாணப்படுத்திச் சோதிச்சாரு. 'உங்களுக்கு இருக்குறது சின்ன சிக்கல்தான். இதுக்கு மூணு மண்டலம் களிம்பு தடவுங்க. தூங்கப் போறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி இந்த லேகியத்துல ஒரு உருண்டை சாப்பிடுங்க'ன்னு சொல்லி 3ஆயிரம் ஃபீஸ் வாங்கிட்டாரு. வாராவாரம் செக்கிங் போக வர்ற இருந்தப்ப, என் சம்சாரம் அந்த ஆளுகூட ரொம்ப நெருக்கம் ஆயிட்டா. இப்போ என் பொண்டாட்டி என்கூட இல்லை. அதுக்குக் காரணம் அந்தப் படுபாவி. என்னை மாதிரி எத்தனையோ குடும்பங்களை அவன் சீரழிச்சு இருக்கான். வெட்கம், மானத்துக்குப் பயந்து நான் யார்கிட்டயும் சொல்லலை!''

இவர் கதை இப்படி என்றால் கொளத்தூர் மகேந்திரனுடையது வித்தியாசமானது. ''நான் சினிமாவில் லைட்மேனா வேலை பாக்குறேன். அதிக எடையை ஏற்றி, இறக்குவதால் 12 வருஷமாகவே எனக்கு முதுகுவலி. எந்த மருத்துவமும் பலன் இல்லை. அப்பதான் ஒரு சேட்டிலைட் சேனல்ல திருவாங்கூர் சித்த வைத்தியசாலை விஜயகுமாரோட நிகழ்ச்சி பார்த்தேன். அவர்கிட்ட போய் நின்னேன். 'மூணு மாசம் ட்ரீட்மென்ட். மாசம் 50 ஆயிரம் ரூபாய் ஃபீஸ். பூசணிக் காய், பாவக்காய் ஆகாது. காபி, டீ கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. தங்கபஸ்ப பவுடர்லாம் கொடுத்தாரு. மூணு மாசத்துக்குப் பிறகும் அதே நிலைமைதான். கேட்டால், 'கண்டிப்பா குணமாகும்னு நான் கான்ட்ராக்ட்ல கையெழுத்தா போட்டு ருக்கேன்!'னு எகத்தாளம் பேசுனார். நம்ம உடம்பு வாகுக்கு ஒத்துக்கலைன்னு நினைச்சு ஒன்றரை லட்ச ரூபாய் போனாப் போகட்டும்னு அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்!'' பத்திரிகை, டி.வி-க்களில் வரும் பந்தா விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, பண பண்டல்களுடன் வந்து போலி வைத்தியர்களிடம் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் எத்தனையோ!
தாம்பத்திய நிகழ்வுகளில் இயல்பான ஆரம்பக் கூச்சத் தயக்கங்களுக்குப் பயந்து பதறி, இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் தஞ்சம் புகுந்தால்... அதோகதிதான். மனைவியுடன் சிநேகமும் புரிதலும் ஏற்பட்டால் மழை மேகமாக விலகிவிடும் சிக்கல்களுக்கு அவர்களின் வைத்திய முறைகள் இருக்கின்றனவே... தங்கபஸ்பம், லேகியம், களிம்பு, அக்குளில் வைத்துக்கொள்ளும் மாத்திரை... என அஜால் குஜால் வைத்தியர்களின் வைத்திய முறைகள் அத்தனையும் விபரீத வில்லங்கங்கள். பழக்கத்தில் மறைந்துவிடக் கூடிய சின்ன பிரச்னைகளை இவர்களின் 'வைத்திய முறை'கள் விஸ்வ ரூபமாக்கி தம்பதிகளிடையே மனஸ்தாபங்களை உண்டாக்கிவிடுகின்றன.

இது போன்ற லேகிய வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், ''எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டோம்னு சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல ஏராளமான ஆளுங்க பலரை ஏமாத்திட்டு இருக்காங்க. ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு லேகிய மருந்துகள் கொடுத்து, 'உனக்கு எல்லாம் சரியாயிடுச்சு. இனி நீ தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம்'னு சொல்லி அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் பரவக் காரணமா இருக்காங்க. அவங்ககிட்ட ஏமாந்தவங்களைத் தேடிப் பிடித்து திரும்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு புரியவெச்சோம். அது சம்பந்தமான டாக்குமென்ட்ரியை லோக்கல் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பியதும், அந்த லேகிய வியாபாரிகள் பக்கமிருந்து எனக்குக் கொலை மிரட்டல்கூட வந்தது. ஆனா, அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை.

தமிழ்நாடு முழுக்க இது மாதிரி டுபாக்கூர் போலி டாக்டர்கள் 900 பேர் இருக்காங்க. அவங்களைப் பத்தி நான் தயாரிச்சுட்டு இருக்கும் பட்டியல் தயாரானதும் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் சேர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்!'' என்றார்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் எழிலன் கூறுகையில், ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ட்ரன்ஸ் தேறி சைக்காலஜி, அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி என மருத்துவக் குழு அங்கீகரித்த பாடங்களை 4 ஆண்டுகள் படித்து 5-வது வருடம் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவங்கள் பெற்ற பிறகே நாங்கள் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுகிறோம். 'ராஜராஜ சோழனுக்கே வைத்தியம் பார்த்தவர் எங்கள் பாட்டன். பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பார்த்து வருகிறோம்' என்பார்கள். 'சோழனுக்கு வைத்தியம் பார்த்ததற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டால் காதில் விழாதது போல வேறு வேலை பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

உடனடி நிவாரணம் தேவைப்படும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இவர்கள் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். ஆனால், நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும் முடக்கு வாதம், பிறவி ஊனம் போன்றவற்றுக்கு வைத்தியம் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். அந்த சிகிச்சைகளில்தானே கொள்ளை கொள்ளையாகப் பணம் பறிக்க முடியும்.

தமது வீட்டில் ஒருவர் நீண்ட நாட்கள் நோய் குணம் அடையாமல் போராடினால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றுதான் குடும்ப உறுப்பினர்களிடம் பெரும் போராட்டம் நடக்கும். எதை விற்றாவது அவரைக் காப்பாற்ற முயல்வார்கள். அந்தப் பாசத்தைப் பணமாக்கும் இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!'' என்று எச்சரிக்கிறார்.

ஒரு முறையேனும் கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியாது. அது போலத்தான் தாம்பத்யமும். ஆரம்பத் தள்ளாட்டங்கள் இதிலும் சகஜம்தான். அதைத் தம்பதிகள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். உடலின் கோளாறுகளுக்கு நிவாரணம் தேட தகுந்த மருத்துவர்களோ, நிபுணர்களோதான் பக்கபலமாக இருப்பார்கள். ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால்கூட ஏ.சி, டி.டி.எஸ், குஷன் ஸீட் என்று வசதிகளைப் பட்டியலிடுபவர்கள், தங்கள் உடல் பராமரிப்புக்கும் அத்தகைய கவனத்தைச் செலுத்துவதுதானே சரி!
நன்றி: விகடன்

Sunday, July 26, 2009

காதல் என்ற பெயரில் நாசப்படுத்திய காதலன்.

'காதல்... காதல்... காதல். காதல் போயின் சாதல்... சாதல்... சாதல்' என்றான் பாரதி. கண்களால் காதல் செய்த காலம் போய், இன்று சதை களால் மட்டுமே காதல் செய்யுமளவுக்கு படுகேவல மான பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது! உண் மையாகக் காதல் செய்த ஒரு பெண், நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டாள் என்பதற்கு உதாரணம் இந்தக் கட்டுரை. இது வெறும் கட்டுரை மட்டுமல்ல... இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையும் கூட!

நன்றி: ஜூ.வி

மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரிப் படிப்பை முடித்த இவர், மதுரையிலுள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிக ஊழியர். தினமும் ஊரிலிருந்து மினி பஸ்ஸில் வரும்போது, அந்த பஸ் டிரைவர் மணிகண்டன் என்பவனிடம் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டு கழித்துதான் மணிகண்டனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை களும் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்து அதிர்ச்சி யடைந்தார் மல்லிகா.

ஆனால், அதற்குள் அவனிடம் அத்தனையும் இழந்திருக்கிறார் மல்லிகா.


இருந்தாலும், காதலித் ததற்காகத் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். அதன் பின் நடந்ததை அழுது வீங்கிய கண்களுடன் திராணியில்லாத நிலையில் நம்மிடம் மருத்துவமனையில் பேசினார் அவர்.

''மணிகண்டன்தான் ஆரம் பத்துல என்னை காதலிக்கிறதா சொல்லி வலிய வலிய வந்தாரு. நான் மறுப்பு சொன்னாலும் என்னையறியாமல் என் மனசு அவரை காதலிக்க ஆரம்பிச்சுடுச்சு. நான் கே.கே.நகர் பக்கத்துல ஒரு ஆபீஸ்ல வேலை பாக்குறேன். வேலை முடிஞ்சதும் தினமும் சாயங்காலம் ஆறரை மணிக்கு அங்கிருக்கிற பூங்காவுல சந்திப்போம். அவர் ரொம்பப் பாசமா பழகுனதால், பல முறை அத்துமீறினார். 'கட்டிக்கப் போறவருதானே'னு நானும் அவரை எல்லாத்துக்கும் அனுமதிச்சிட்டேன். கல்யாணமானவர்னு உண்மை தெரிஞ்ச பின்னாடியும் அவரைப் பிரிய மனசில்லாம கட்டிக்கிட்டா அவரைத்தான் கட்டிக்குவேன்னு உறுதியா இருந்தேன்... ஆனா, படுபாவி இப்புடி என்னைச் சீரழிப்பான்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலையே...'' என்ற மல்லிகா, மேற்கொண்டு பேச முடியாமல் மயங்கி சரிந்தார்.


நர்ஸ் வந்து சோதிச்சு... மருந்தை கொடுக்க, அதை விழுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட மல்லிகா தொடர்ந்தார். ''அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மறுத்தாலும், எப்படியும் மனசை கரைச்சிடலாம்னு இருந்தேன். அன்னிக்கும் அப்படித்தான் கே.கே.நகர் பூங்காவுக்கு வான்னு கூப்பிட்டான். சாயங்காலம் ஏழு மணிக்கு போனேன். வழக்கமா சந்திக்குற மறைவான இடத்துல உட்கார்ந்துக் கிட்டோம். அவன் என்னை தொட்டான். ஆனா, இந்த முறை நான், 'என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடிதான் இனி தொடணும். அதை மீறி தொட்டா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது'ன்னு கடுமையா பேசுனேன். அப்ப அவன், 'நாளைக்கே வீட்டை விட்டு வெளியே வா. நாளை மறுநாள் கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக் கிறேன்'னு என் தலையிலடிச்சு சத்தியம் செஞ்சான். ரொம்ப சந்தோஷமடைஞ்சு, அன்னிக்கும் அவன் எதிர்பார்த்தபடியெல்லாம் நடந்துகிட்டேன்.

அடுத்த நாள் சாயங்காலம் ஆறரை மணிக்கு கொஞ்சம் டிரஸை மட்டும் எடுத்துக்கிட்டு போய், அதே பூங்காவுல அவனை சந்திச்சேன். நாளைக்கு நமக்கு கல்யாணம்னு சொல்லியே ரொம்ப நேரம் அவன் அனுபவிச்சான். திடீர்னு, 'கல்யாணத்துக்கு பசங்க ட்ரீட் கேட்டிருக்காங்க. அவங்களை வரச் சொல்லியிருக்கேன்'னு சொன்னான். அரைகுறை டிரசுல எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. கண்டபடி அவனை திட்டிட்டு, டிரஸை எடுத்துப் போட்டுக்கிட்டேன். 'உன் ஃபிரண்ட்ஸ் முன்னாடி எல்லாம் இந்த இடத்துல, என்னால் நிக்க முடியாது. நீ ட்ரீட்டை இன்னொரு நாளு கொடுத்துக்கோ. வா போகலாம்'னு நான் சொன்னபோது, மூணு ஆளுங்க வந்தாங்க.

நான் அமைதியா பெஞ்சு மேல உட்கார்ந்திருந்தேன். அப்ப மணிகண்டன் என்கிட்ட, 'நீ இங்கயே இரு. பக்கத்துல கடைக்குப் போய் பசங் களுக்கும் உனக்கும் சாப்பிட வாங்கிட்டு வர்றேன்'னு சொன்னான். நான் சொல்லச் சொல்ல கேட்காம வேகமா போயிட்டான். நான் இருட்டுல தனியா உட்கார்ந்திருக்கும்போதே மூணு பேர்ல ஒருத்தன் என்னை நெருங்கி வந்து அத்துமீறினான். அதிர்ச்சியடைஞ்ச நான், 'அவரு வந்தா உங்களை கொன்னுப்புடுவார்... கையை எடுடா...'ன்னேன். அதுக்கு இன்னொருத்தன், 'உன்னை அனுபவிக்க தலைக்கு ஐந்நூறு வாங்கியிருக்கான். அயிட்டம்தானேடி நீ... சத்தம் போடாம படு...'னு சொன்னப்பகூட, 'மணிகண்டன் அப்பிடி எல்லாம் செஞ்சிருக்க மாட்டான்'னு நம்பினேன். அதுக்குள்ள மூணு பேர்ல ஒருத்தன் என் வாயை அடைக்க... இன்னொருத்தன் டிரஸ்ஸை உருவி தொடையை அழுத்தி பிடிச்சான். இப்படி மாறி மாறி என்னை சீரழிச்சானுங்க... கொஞ்ச நேரத்துல அங்க மணிகண்டனும் வந்தான். எல்லாரும் மாறி, மாறி மிருகங்களைவிட மோசமா நடந்துகிட்டதை அவன் கண்ணாலேயே பார்த்தான்...'' என்றவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை.

மல்லிகா சார்பில் பேசிய உறவினர் ஒருவர், ''அரை மயக்கத்துல கிடந்தவளை அப்படியே தூக்கி பைக் நடுவுல உட்கார வெச்சுகிட்டு, வண்டியை மதுரை கல்லூரி பக்கம் விட்டிருக்கானுங்க. அப்ப நைட்டு பதினோரு மணிக்கு மேலயிருக்கும். பாலத்துக்கு நடுவுல வண்டியை நிப்பாட்டியிருக்காங்க. பாலத்துக்கு கீழே ரயில் தண்டவாளம் இருக்கு. ரயில் வர்றப்ப தண்டவாளத்துல போட்டிடலாம்ங்கிறதுதான் திட்டம். அந்த நேரம் ரயில் வரலை. உடனே, இவளை மேலேயிருந்து தண்டவாளத்துல போட்டுட்டு போயிட்டானுங்க.

கீழே விழுந்ததுல மல்லிகாவோட ரெண்டு காலும் முறிஞ்சு, எலும்பெல்லாம் முறிஞ்சு போச்சு. அந்த நேரத்துலயும் அந்த பக்கமா போன ஒருத்தர் பார்த்துட்டுக் கொடுத்த தகவலால் மல்லிகாவை மீட்டோம். அப்பக்கூட அந்த பொண்ணு கௌரவத்தை விட்டுக் கொடுக்காம எங்ககிட்ட, 'தவறி விழுந்துட்டேன்'னுதான் சொன்னுச்சு. அதுக்கப்புறம், டாக்டர் சோதனையில அந்த பொண்ணை பலர் சேர்ந்து நாசம் பண்ணியிருக்கறது தெரிஞ்சுது. மார்பு முழுக்க பல்லால் கடிச்ச காயங்களும் இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு விசாரிச்சப்பதான், அந்தப் பொண்ணு எல்லா விஷயத்தையும் எங்க கிட்ட சொல்லி அழுதுச்சு...'' என்றார்.

இது குறித்து திலகர் திடல் உதவி கமிஷனரான கணேசனிடம் பேசினோம். ''ஆரம்பத்துல அந்தப் பொண்ணு சம்மதிக்காம மறுத்திருக்கு. 'மிரட்ட வும் மணிகண்டன் தன்னை நாசப்படுத்தி பாலத் திலிருந்து தள்ளிவிட்டுட்டான்'னு சொல்லிச்சு. மற்றபடி, உங்களுக்கு கிடைத்த தகவல்படி, மணிகண்டனோட நண்பர்கள் சிலரும் சேர்ந்து நாசப்படுத்தினாங்களான்னு தெரியலை. உடனே, விசாரிக்கிறோம். ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி இருந்தா, அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கிறேன்...'' என்றார்.
நன்றி: ஜூ.வி.

பென்ஷனுக்காக போராட்டமா? ஜனாதிபதிக்கு இணையத்தின் மூலம் புகார் அனுப்பலாம்


புதுடெல்லி, ஜூலை 25- எவ்வளவோ போராடிப் பார்த்தும் பென்ஷன் கிடைக்கவில்லையா, ஜனாதிபதிக்கு உங்கள் புகார் மனுவை இணையதளம் மூலமாக நேரடியாக அனுப்பி வைக்கலாம். இந்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க ஜனாதிபதி மாளிகை நடவடிக்கை எடுக்கும்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தகவல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், அவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவனில் காகிதங்களில் நடக்கும் வேலைகள் குறைத்து கொள்ளப்பட்டு கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது பொதுமக்கள் புகார்களை பெற்றுக் கொள்வதற்காக http://helpline.rb.nic.in/ என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே நாள்தோறும் சராசரியாக 400 புகார் மனுக்கள் ராஷ்டிரபதி பவனுக்கு வருகின்றன. இவற்றை பிரித்து உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறும், அதற்குரிய பதிலை அனுப்பி வைக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொள்வார்கள்.
இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ் கூறியதாவது:
இணையதளம் பற்றி பொதுமக்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் இதை பயன்படுத்துவது அதிகரிக்கும். இப்போது காகிதத்தில் எழுதி அனுப்பப்படும் மனுக்களையும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து பிற துறைகளுக்கு அனுப்ப உள்ளோம். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், புகார் கொடுத்தவருக்கு உரிய பதிவு எண்ணை கொடுக்கிறோம். ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஞாபகப்படுத்தி, சம்பந்தப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. தங்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில்தான், ஜனாதிபதிக்கு தங்கள் புகார்களை பொதுமக்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, July 25, 2009

ஆசிரியர் பயிற்சி பெற ஊனமுற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை: இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற ஊனமுற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கை, கால், உடல் ஊனமுற்றோருக்கென, ஊனமுற்றோர் நல்வாழ்வுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம், சென்னை பூந்தமல்லியில் செயல்பட்டு வருகிறது.

இதில், அறிவியலை முதன்மையாகக் கொண்டு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட கை, கால், உடல் ஊனமுற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பெற 250 ரூபாய்க்கான வங்கி வரைவு, "ஸ்டேட் கமிஷனர் பார் டிசேபிள்டு, சென்னை - 6' என்ற பெயரில் சுயவிலாசமிட்ட ஐந்து ரூபாய்க்கான தபால்தலை ஒட்டிய அட்டையுடன், வங்கி வரைவோலையின் பின்பக்கத்தில் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை, முதன்மைச் செயலர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், 15/1 மாதிரி பள்ளிச்சாலை, ஆயிரம்விளக்கு சென்னை - 6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலை மூலம் 2009 - 11ம் கல்வி ஆண்டில், தற்போது பணியில் உள்ள 1000 ஆசிரியர்களுக்கு பி.எட்., கற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு வருகிற அக். 25ம் தேதி நடக்க உள்ளது. தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டுக் கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவியியற்பியல், உயிர் இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உயிர்வேதியியல், பயன்பாட்டு வேதியியல், விலங்கியல், தாவரவியல், தாவர உயிரியல், நுண்ணுயிரியல், சுற்றுச் சூழல் அறிவியல், உயிர் நுட்பவியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி பயன்பாடு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், பொருளாதாரம், வணிகவியல், மனையியல் பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக, மத்திய அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பிரைமரி, நர்சரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்., பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகவும், தற்போதும் பணியில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஆங்கிலம் வாயிலாகவே பாடங்கள் உள்ளன.

பி.எட்., விண்ணப்பங்களை, "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கல்வி மைய அலுவலகத்தில் 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2' என்ற முகவரியிலும், மதுரை நகர் கல்வி மைய அலுவலகம், 36, மேலவடம்போக்கித் தெரு, மதுரை-1' என்ற முகவரியிலும் ரூ. 500 செலுத்தி நேரில் பெறலாம். தபாலில் பெற விரும்புவோர் ரூ. 550 மணியார்டர் மூலம் அனுப்பியும் பெறலாம். மேலும் விபரம் பெற, ஒருங்கிணைப்பாளரை 0452- 652 2013, 233 9974 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 21, 2009

சூரிய கிரகணத் தொழுகையில் நபி ஸல் அவர்கள் கண்டது.


524. ‘ஆயிஷா (ரலி) தொழுது கொண்டிருந்தார். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, ‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) வானை நோக்கிச் சுட்டிக் காட்டினார். (தொழுகையில் பேசக் கூடாது என்பதால்), ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும் கூறினார். அப்போது ‘இது (ஏதாவது) அடையாளமா?’ என நான் கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), ‘ஆமாம் அப்படித்தான்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (மயக்கத்தைப் போக்க) என்னுடைய தலையின் மீது தண்ணீரை ஊற்றினேன்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, ‘எனக்கு இதுவரை காட்டப்படாத சுவர்க்கம், நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனுடைய குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) ‘இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?’ என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர் ‘அவர்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களுக்குத் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்றோம்’ அவர்களைப் பின்பற்றினோம்; அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம்’ என்று மும்முறை கூறுவார். அப்போது ‘(சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!’ என்றும் ‘நிச்சயமாகவே நீர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்’ என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ ‘எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்’ என்பான்’ என்று கூறினார்கள்” என அஸ்மா (ரலி) அறிவித்தார். புஹாரி

525. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் சூரா பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின் வாங்கியது போல் நாங்கள் கண்டோமே (அது ஏன்?)’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் சொர்க்கத்தைப் பார்த்தேன்.

அதன் ஒரு குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள்.


மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்’ என்று கூறினார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்’ என்று விடையளித்தனர். ‘அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்’ என்று கேட்கப்பட்டதற்குக் ‘கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்’ என்று விடையளித்தார்கள்.

இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவத்தினர் அதிரடி கைது

இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக இதுவரை ஏழு இந்திய ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் உளவு பார்த்ததாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, ஏழு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.


கடந்த 2006-09ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருந்துள்ளது என்றார்.

தேசத்திற்கு எதிராக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள தேச துரோகிகளின் விபரங்களை மக்கள் முன் வெளியிடுமா அரசு?

Monday, July 20, 2009

பள்ளிக் கல்வித்துறையில் 12,000 ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்துவிட்டதால், அந்தப் பட்டியலில் இருந்தே, தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கடந்த 15ம் தேதி சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 6,469 ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 5,166 ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 165 விரிவுரையாளர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் என, 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில் நியமனம் செய்யப்படுவர்' என அறிவித்தார்.


இதையடுத்து, துறை வாரியாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் துவக்கியுள்ளது. ஏற்கனவே, ஒவ்வொரு துறை வாரியாக புதிய ஆசிரியர்களை தேர்வு செய்தபோது, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் வேலை வாய்ப்பு இயக்குனரகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியலைப் பெற்று, அதில் முதல் நிலையில் இருந்தவர்களைத் தேர்வு செய்தது. ஐந்து பேரில் ஒருவர் வேலை வாய்ப்பு பெற்றுவிட்ட நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் மீதம் நான்கு பேர் இருக்கின்றனர். இவர்களில் இருந்து, பதிவு மூப்புப்படி ஒருவரை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், தேர்வுப் பணிகள் விரைவாக முடியும். இப்படி, துறை வாரியாக தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பெயர்ப் பட்டியலை, அந்தந்த துறைகளிடம் ஒப்படைத்துவிட்டால், அதன்பின் பணி நியமன கவுன்சிலிங் நடக்கும்.


தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஓரிரு நாளில் துவக்கி, ஆகஸ்ட் 20ம் தேதிக்குள், தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஒப்படைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் 10ம் தேதிக்குள்ளாகவோ புதிய ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு அனைத்து துறைகளும் திட்டமிட்டுள்ளன. கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ளன. செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடும். அதற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும்.

Saturday, July 18, 2009

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

வெளிநாடுகள் பலவும் முதலாளித்துவம் மற்றும் தனியார்மயம் போன்றவற்றிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஆட்சியாளர்கள் மட்டும் அந்தத் தீமையை இந்தியாவுக்குள் முழு அளவில் கொண்டு வரத் துடிக்கிறார்கள் என எழுத்தாளர் சோலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து குமுதம் ரிப்போர்ட்டரில்அவர் எழுதியுள்ள கட்டுரை:

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மும்பை நகர மக்கள் சாலைகளுக்கு வந்து போராடினார்கள். வழியே சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்தப் போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. வாழ்க்கைச் சுமை - இதய அழுத்தம் இயல்பான போராட்டத்திற்கு வழிவகுத்து விட்டது.

என்ன காரணம்?

மின்சார விநியோகத்தை மராட்டிய அரசு ரிலையன்ஸ் போன்ற பிரதான தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் மின்கட்டணத்தை மளமளவென்று உயர்த்தியது. அதனை எதிர்த்துத்தான் மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

வேறு நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட ரிலையன்ஸ் மின் கட்டணத்தை உயர்த்துகிறது என்று மும்பை நகர மக்கள் முழக்கமிடுகிறார்கள். போராட்டம் தொடரும்.

டெல்லி தலைநகரின் மின்விநியோகமும் தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அங்கேயும் குத்தகை பெற்ற நிறுவனங்களிடம் மாநில அரசு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் விநியோகத்திற்கான குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் பலமுறை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், டெல்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இறைவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால், மின்சாரத்தைத் தரிசிக்க முடியாது என்ற நிலைதான்.

எனவேதான் டெல்லி நகர மக்களும் சாலைகளுக்கு வந்து போராடுகிறார்கள். மக்களின் உள்ளக்கொதிப்பு வெடிக்கும் கொதிநிலைக்கு வந்திருக்கிறது.

நான்கு நாட்களுக்குள் மின்விநியோகம் சரி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஷீலாதீட்சித் எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் டெல்லி தவிக்கிறது. மின் தடை காரணமாக தண்ணீர் விநியோகமும் முழுமையாகத் தடைபடுகிறது. எனவே, பாயத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மாதிரி தலைநகர மக்கள் தயாராகிறார்கள்.

இந்த நிகழ்வுகளெல்லாம் நடைமுறையில் நாம் காணும் வேதனைச் சித்திரங்கள். தனியார் துறையின் மகத்துவங்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ன சொல்கின்றன? அனைத்தும் தனியார்மயம் என்பதுதான் நாட்டின் பிரச்னைகளுக்கு சர்வரோக நிவாரணம் என்று சொல்கின்றன. அவை சீர்திருத்தங்களாக இருக்காது. நாட்டின் சீரழிவிற்கு முன்னோடியாக இருக்கும். ஆனால், அவற்றைத்தான் வேகவேகமாக மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தப்போகிறது.

ரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், அணுமின் உற்பத்தி ஆகிய அனைத்தையுமே தனியார் துறைக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

பாதுகாப்புத் துறையிலும் தனியார் மயம்!

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், சாதனங்கள் ஆகியவை பெரும்பாலும் பொதுத்துறையில் தயாரிக்கப்படுகின்றன. இனி அந்தத் துறைகளில் அன்னிய மூலதனங்களை 49 சதவிகித அளவிற்கு அனுமதிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தம் சொல்கிறது.

தொழில்துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கலாம். பன்னாட்டு நிதி நிறுவனங்களை அனுமதிக்கலாம். பிற அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும் அனுமதிக்கலாம். அவர்கள் முதலீடு செய்யும் அளவிற்கு அவற்றுக்கு நிர்வாகத்திலும் பங்கு தரலாம் என்றும் அந்தச் சீர்திருத்தம் சொல்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கலாம். உணவுப் பொருள் துறையையும் அன்னிய முதலீடுகளுக்கு அர்ப்பணிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தங்கள் நீட்டோலை வாசித்துக் கொண்டே போகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உலகை உலுக்கிய பல சரித்திர நிகழ்வுகளை தென் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. அந்தக் கண்டத்தின் பலப் பல நாடுகளும் இன்றைக்கு மன்மோகன் அரசு சமர்ப்பிக்கும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவைதான். அதன் விளைவு என்ன?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நோய்கள் வாட்டி வதைத்தன. அந்த நாடுகளின் செல்வங்களை அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச் சென்றனர். உள்நாட்டு வணிகம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது.

இதனைக் கண்டு ஏழைகளோடு பழகும் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போர்க்கோலம் பூண்டனர். அவர்களின் முன்னணிப் படையாக இடதுசாரி சக்திகள் எழுந்தன.

அன்னிய முதலீடு என்றால், அந்த நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள்தான். இதனை எதிர்த்து வெனிசுலா நாட்டில் புரட்சி வெடித்தது. கத்தோலிக்க திருச்சபையும் இடது சாரி சக்திகளும் இணைந்து போராடின. வெனிசுலாவிற்கு கியூபா கலங்கரை விளக்கமாகக் காட்சி அளித்தது.

ஆட்சி அதிகாரத்தை மக்கள் இடதுசாரி சக்திகளுக்கு அளித்தனர். அனைத்து அன்னிய கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

இன்றைக்கு வெனிசுலா மட்டுமல்ல, அதன் அடிச்சுவட்டில் பிரேசில், சிலி, பொலிவியா போன்ற மேலும் ஆறு நாடுகளில் இடதுசாரி சக்திகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. எவற்றையெல்லாம் சீர்திருத்தங்கள் என்று மன்மோகன் சிங் அரசு உடுக்கை அடிக்கிறதோ, அவையெல்லாம் நாட்டிற்குக் கேடுகள் என்று அந்த நாடுகள் கப்பலேற்றி அனுப்புகின்றன. அதன் பின்னர்தான் அந்த நாடுகளின் சாமானிய மக்கள் வாழத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே ஆட்சிக்கு வந்தவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல. இடதுசாரி எண்ணம் கொண்ட தேச பக்தர்கள். அவர்களுக்குக் கரம் கொடுப்பது கத்தோலிக்கத் திருச்சபைகள்தான்.

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

அங்கே வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.

நமது பாட்டன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அரசு நிறுவனங்களெல்லாம், ஆலைகளெல்லாம் புதிய ஆலயங்களாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இனி அவற்றின் பங்குகளை ஆண்டிற்கு 25000 கோடி அளவிற்கு விற்பார்களாம்.

அந்தப் பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் உழைக்கும் மக்கள் அறுபதாண்டுகளாக உருவாக்கிய நமது சொத்துக்கள். அவற்றை விற்க மன்மோகன்சிங் அரசிற்கு அதிகாரம் அளித்தது யார்?

நெய்வேலியையோ, சேலத்தையோ, திருச்சி பெல் நிறுவனத்தையோ தவணை முறையில் விற்க முன்வந்தால், அதை தி.மு.கழகம் ஆதரிக்குமா?

மேற்கு வங்கத்துப் பொதுத்துறை நிறுவனங்களை அமெரிக்கத் துரைமார்களுக்கு விற்பதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வாரா?

தென் அமெரிக்க நாடுகள் விரட்டியடிக்கின்ற பிசாசுகளை இங்கே தேவதைகள் என்று அழைத்து வருகிறார்கள். கொடுமை.

அனைத்தும் தனியார் துறைக்கே என்பதனை மோட்சத்தின் திறவுகோலாக அமெரிக்கா சித்திரித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நமது காயகல்பப் பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் கண்களை இழந்தவர்கள் இங்கே நமது கண்களை விலைபேச வரப்போகிறார்கள். அவர்களுக்கு விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளம்தான் இந்திய அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களாகும்.

தேவையில்லாத விருந்தாளியை அழைத்தால், நமக்குத் தேவையானவற்றையெல்லாம் இழக்க நேரிடும்!, என அதில் எழுதியுள்ளார் சோலை.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கும் என்பதற்கு அடுத்த ஆதாரம்


நாக்பூர்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்ய முடியும். அது ஒன்றும் மோசடிகள் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பானது அல்ல' என்று, ஐதரபாத்தை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின், மின்னணு வாக்குப்ப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதன் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நெட் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரி கே.பிரசாத் என்பவரும், "எலக்ஷன் குரூப்' என்ற அமைப்பைச் சேர்ந்த வி.வி.ராவ் என்பவரும் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்பே புரோகிராம் செய்யப்பட்ட "சிப்'களைப் பொருத்துவதன் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடிகள் செய்ய முடியும். இந்த வகை "சிப்'கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த "சிப்'களை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தி விட்டால், பதிவாகும் ஓட்டுக்களில் 60 சதவீத ஓட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு விழும்படி செய்ய முடியும். அதாவது பத்து ஓட்டுக்கள் பதிவானால், அதில் ஆறு ஓட்டுக்கள் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு கிடைக்கும்படி செய்யலாம். இதுபோன்ற பிரச்னை இல்லாத, பாதுகாப்பான வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க வேண்டும் எனில், இந்த இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தவறுகள் நிகழ்ந்தால் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்க வேண்டும். ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதை காட்ட ரசீது வருவது போல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் தானாக ரசீது வரும் முறையை உருவாக்க வேண்டும் என்றனர்.

வங்கிக் கணக்கு விவரம் : ஆன்-லைனில் கேட்டால் உஷார்


மும்பை : ஆன்-லைனில், உங்கள் வங்கிக்கணக்கு தொடர்பான எந்த ஒரு விவரமும், வங்கியே "இ - மெயிலில்' கேட்டாலும், வெப்சைட் மூலம் அறிவித்தாலும் உஷார்! உறுதி செய்து கொள்ளாமல் விவரம் தெரிவிக்க வேண்டாம். பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகளின் கூட்டமைப்பாக உள்ளது இந்திய வங்கிகள் சங்கம். இந்த சங்கத்துக்கு "இந்திய வங்கிகள் சங்கம்' என்ற பெயரில் வெப்சைட் உள்ளது. இதன் முகவரி http://www.iba.org.in/homepage.asp சமீபத்தில் இந்த வெப்சைட்டை போலவே போலி வெப்சைட்டை யாரோ உருவாக்கியுள்ளனர். இந்திய வங்கிகள் சங்க வெப்சைட் போலவே வடிவமைப்பு, விவரங்கள் அளித்திருந்தனர் இந்த போலி வெப்சைட்டில். மேலும், வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டனர் இந்த ஆன்-லைன் மோசடி ஆசாமிகள். "உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும். சலுகைகள் காத்திருக்கின்றன' என்றெல்லாம் அதில் அறிவித்தனர். வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கு "யூசர் நேம்' மற்றும் பாஸ்வேர்டு போன்ற விவரங்களையும் கேட்டுள்ளனர். எப்படியோ, அதிகாரப்பூர்வ இந்திய வங்கிகள் சங்க வெப்சைட்டுக்கு இணைப்பை இந்த மோசடிக்கும்பல் உருவாக்கி இருந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனினும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து, உடனடியாக இந்த மோசடி கண்டுபிடிக் கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. போலி வெப்சைட்டை செயல்படுத்தியது அமெரிக்காவில் உள்ள சிலர் தான். அவர்கள் திட்டமிட்டு இந்த மோசடியை செய்துள்ளனர் என்பது மட்டும் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸ் குழு விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து தான் இந்த மோசடி செய்யப் பட்டுள்ளது என்பதால், அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்ளப் பட்டுள்ளனர். எனினும், இதுவரை அந்த மர்ம ஆசாமிகள் பற்றிய விவரம் தெரியவில்லை.

Wednesday, July 15, 2009

பொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்! வருகிறது இன்னொரு கலவர திரைப்படம்.


நன்றி -இனியவன்


இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை. தெரிவிக்கவும் முயலுவதில்லை.

சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள் (உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை, அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள் (ஈரானிய திரைப்படங்கள்) எடுக்கப்பட்டுள்ளன. எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.

அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம். படத்தின் கதை இதுதான். நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் நதிராவி ற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை.இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.

மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.நல்ல வேளையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).

ஏற்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல்,ரகசிய திருமணம் செய்தல்,கடற்கரைகளில்,பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும். பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.

தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.

Monday, July 13, 2009

13 ஆண்டுகளாக தூக்கம் கலையாத அஞ்சல் துறை

மாவட்டங்களின் பெயர்களில் ஜாதி தலைவர்ககள், சுதந்திர போராட்டதியாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இருந்தாலும் அஞ்சலக "சீல்'களில் மட்டும் இன்னும் பழைய மாவட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதை யாரும் இதுவரையிலும் கவனித்ததாக தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் கள் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை கொண் டிருந்தது. செங்கை அண்ணா மாவட்டம், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், பசும்பொன் தேவர் மாவட்டம், காமராஜர் மாவட்டம் என்ற பெயர்களுடன் விளங்கியது. கடந்த 1996ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, ஜாதித்தலைவர்கள் பெயர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர்களை மாற்றியது. இதனால், காமராஜர் மாவட்டம், விருதுநகர் மாவட்டமாகவும், பசும் பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாகவும், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், திண்டுக்கல் மாவட்டமாகவும் பெயர் மாற்றம் பெற்றது. தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்களின் பெயர்களும் மாற்றப் பட்டன. இந்த பெயர் மாற்றம் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. பொதுவாக பெயர் மாற்றம் பெறும் போது மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்கள் அனைத்திலும் பெயர் மாற்றம் ஏற்பட்டுவிடும். அஞ்சல் துறை சார்பில், அஞ்சலகங்களில், கடிதங்கள் மீது பதிக்கப்படும் "சீல்'களிலும் ஊர் பெயர் மாற்றப்படும் வழக்கம் உள்ளது.


இதன் படி மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே அனைத்து ஊர்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டமாக உள்ள பசும்பொன் தேவர் மாவட்டத்தில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் மட்டும் இன்னும்" பி.எம்.டி' மாவட்டம் என்றே அஞ்சலக சீலில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு திருமணத்திற்காக சிவகங்கையில் உள்ள ஒருவருக்கு திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளார். தி.நகர் தபால் நிலையத்திலிருந்து அனுப்பப் பட்ட அந்த அழைப்பிதழில் கடந்த மாத 8ம் தேதிக்கான சீல் வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த மாதம் 12ம் தேதி சிவகங்கை மாவட்ட பள்ளத்தூர் அஞ்சலகத்திற்கு சென்று அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சீலில் "பள்ளத்தூர்' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளது. அடுத்ததாக அந்த ஊருக்கான அஞ்சல் குறியீட்டு எண் 630107 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக "P.M.T.DIST' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாக மாற்றப் பட்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் துறையான அஞ்சல் துறையில் மாற்றம் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. தமிழக அரசு இம்மாதிரியான பெயர்கள் இடம் பெறுவதன் மூலம் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பெயர்களை நீக்கியது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரும், இந்நிலை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""மாவட் டங்கள் பெயர் மாற்றம் பெற்றவுடன், அஞ்சலக சீல்கள் மாற்றப்பட்டுவிட்டன. அஞ்சல் துறையில் சீல்கள் மாற்ற வேண்டும் என்றால், அலிகாரில் உள்ள அஞ்சல்துறை ஸ்டோருக்கு " இண்டன்ட் ' போட்டு அனுப்ப வேண்டும். அவர்கள், இரண்டு மாதங்களில் தயாரித்து அனுப்புவர். பெரும்பாலும் சேதமடைந்துவிடும் இது போன்ற சீல்கள் இரண்டே மாதத்தில் கிடைக்கும். மாவட்டங்கள் பெயர்கள் மாற்றம் பெற்றதும், குறிப்பிட்ட அந்த அஞ்சலகத்தை சேர்ந்தவர்கள் இண்டன்ட் போட்டு அனுப்பி, அங்கிருந்து வராமல் இருக்கலாம்.

அல்லது அஞ்சலக அதிகாரிகளின் அலட்சியத்தால் இது நடந்திருக்கலாம்,'' என்றார். பள்ளத்தூர் அஞ்சலக அதிகாரியின் கவனக்குறைவோ அல்லது அலிகாரில் உள்ள அஞ்சல் துறை ஸ்டோரில் உள்ளவர்கள் கவனக்குறைவோ எது இருந்தாலும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஊரின் பெயர் மாற்றப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காத தன்மையை காட்டுகின்றது. தற்போது, இந்த ஒரு மாவட்ட பெயர் தான் தெரிந்துள்ளது. இன்னும் எந்தெந்த மாவட்டங்களின் பெயர்கள் அஞ்சல் துறையின் "சீல்"களில் மாற்றப்படாமல் உள்ளன என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.
நன்றி: தினமலர்

Saturday, July 11, 2009

கம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கல்வி அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 11- கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.

கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.

வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Friday, July 10, 2009

பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு முதல்வர் 50 ஆயிரம் வழங்கினார்.

மறு கூட்டல் மூலம் முதல் இடம் பிடித்த பிளஸ்2 மாணவருக்கு ரூ.50 ஆயிரம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னை, ஜூலை. 10 பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் பாலமுருகனுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி ரூ.50 ஆயிரம் வழங்கினார்.



பிளஸ்-2 மறு கூட்டல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில் நெல்லை ரமேஷ் (நெல்லை மாவட்டம்), எம்.லிங்கேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்), கே.சி.சிஞ்சு (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஏ.பிரவீன் (கரூர் மாவட்டம்) ஆகிய 4 பேர் தலா 1200 மார்க்குக்கு 1183 மார்க் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.

பிளஸ்-2 தேர்வில் உள்ள விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவ - மாணவிகளுக்கு புதிய மார்க் குகள் அனுப்பப்பட்டன.

மாணவர் பாலமுருகன் முதலிடம்
அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் எஸ்.பாலமுருகனும் ஒருவர். அவர் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர். அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பு எடுத்த மொத்த மதிப்பெண்கள் 1176. அவர் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ்-187, ஆங்கிலம்-193, கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-197, உயிரியல்-199.

ஆனால் அவர் தமிழில் மார்க் குறைந்து இருப்பதாக எண்ணி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அப்போது அவருக்கு கூடுதலாக 8 மார்க் கிடைத்தது. அதாவது தமிழில் 195 மார்க் கிடைத்தது.

இதன் மூலம் இவருடைய மொத்த மதிப்பெண்கள் 1184 ஆக மாறியது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட பாலமுருகன் ஒரு மார்க் அதிகம் பெற்றுள்ளார். விடைத்தாள் மறுகூட்டல் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த மாணவர். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட ஒரு மார்க் கூடுதலாகவும் பெற்றுள்ளார் என்றால் இவர்தான் முதலிடம் பெற்ற மாணவர். இவரது விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருந்தால் தேர்வு முடிவுகள் தெரிந்த அன்றே இவர் முதலிடம் பெற்ற மாணவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பார் அந்த மகிழ்ச்சியை தவறு செய்த ஆசிரியர்கள் வழங்குவார்களா? அந்த நேரத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை என்னிப்பார்க்கவேண்டும்.

விடைத்தாள்கள் திருத்தியதில் அலச்சியப்போக்காக இருந்த ஆசிரியர்கள் கைது செய்து தண்டிக்கப்படவேண்டும். அரசு அறிவிக்கப்பட்டுள்ளது போல் பணியிடை நீக்கம் தவறுக்கு தீர்வு ஆகாது.

மறு கூட்டல் மூலம் அதிக மதிப்பெண் பெற்றமாணவனின் இந்த செய்தி அறிந்த முதல் அமைச்சர் கருணாநிதி நேற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பாலமுருகனை தலைமை செயலகத்திற்கு அழைத்து பாராட்டி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

அதுமட்டுமல்ல பாலமுருகன் எந்த கல்லூரியில் படித்தாலும் படிப்பின் முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் கருணாநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வி செயலாளர் எம்.குற்றாலிங்கம், இயக்குனர் பி.பெருமாள்சாமி, இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி மற்றும் மாணவர் பாலமுருகனின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! தவறுசெய்த ஆசிரியர்களை கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் ஆசிரியர்களின் மெத்தனப்போக்கு! விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு பாடத்தில் 22 மதிப்பெண் விடுபட்டதால் அதிர்ச்சி.

109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பிறகு, மறு மதிப்பீடு செய்த மாணவர்களுக்கு திருத்திய மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுகள் துறை வழங்கி வருகிறது. அதன்படி 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில், மாணவர்கள் சிலர் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு 109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளது தெரிய வந்தது. வணிகவியல் பாடத்தில் அவர் வெறும் 60 மதிப்பெண்கள் பெற்றதாக முதலில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மறுமதிப்பீட்டுக்கு பிறகு அவர் 169 மதிப்பெண்கள் பெற்றார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியரின் அலட்சியத்தால், சென்னை மாணவருக்கு 22 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளன. இதனால் கல்லூரியில் அந்த மாணவருக்கு சீட் கிடைக்கவில்லை.

சென்னை, கீழ்ப்பாக்கம் ரெசீனா மெட்ரிக். பள்ளியில் படித்த மாணவர் வி.சி.எஸ்.தீபக். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். மொழிப் பாடம் 164, ஆங்கிலம் 151, பொருளியல் 143, வணிகவியல் 142, கணக்கு பதிவியல் 129, வணிக கணிதம் 122 என மொத்தம் 851 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எனினும், கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு 129 கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து விடைத்தாள் நகல் கேட்டு பெற்றார். கணக்கு பதிவியல் விடைத்தாளின் 3 பக்கங்கள் திருத்தவே இல்லை என்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மறு மதிப்பீட்டுக்கு தீபக் விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு செய்யப்பட்ட பிறகு விடுபட்ட பகுதிக்கு 22 மதிப்பெண்கள் கிடைத்தன. அதன்படி மொத்த மதிப்பெண் 873 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், சென்னை கல்லூரியில் பிகாம், பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர தீபக் விண்ணப்பித்து இருந்தார். 75 சதவீதம் மதிப்பெண் இல்லை என்று கூறிய கல்லூரி நிர்வாகம், தீபக் கேட்ட 2 படிப்புக்கும் இடம் கொடுக்காமல் அவரது விண்ணப்பத்தை நிறுத்தி வைத்தது. இதனால் தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் தீபக் வேதனை அடைந்தார். மறு மதிப்பீட்டுக்கு பிறகு கிடைத்த 22 மதிப்பெண்களை காட்டி, சீட் வாங்க மாணவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு விடைத்தாளுக்கு இவ்வளவு தொகை வழங்க வேண்டும். குறைத்துக் கொடுத்தால் பணிக்கு வரமாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.

பலவிதமான குடும்பச் சூழ்நிலையில் இரவு பகலாக கண்விழித்து மாணவர்கள் படிக்கின்றனர். பதற்றத்துடனேயே தேர்வு எழுதுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றால்தான் நன்கொடை கொடுக்காமல் கல்லூரிகளில் இடம் வாங்க முடியும் என்ற விழிப்புணர்வு இப்போது மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.

அவர்களின் நம்பிக்கையில் மண்ணை போடும் விதமாக ஆசிரியர்கள் கவனக்குறைவாக விடைத்தாள் திருத்துகின்றனர். நகரங்களில் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவது, மறு கூட்டல் செய்வது, மறுமதிப்பீடு செய்வது போன்ற வசதிகளை பெற முடிகிறது. கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய முடியாமல் விட்டுவிட்டால், விடுபட்ட மதிப்பெண்களை அவர்கள் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மறு மதிப்பீடு கேட்பவர்களால்தான் விடுபட்ட மதிப்பெண்ணை பெறமுடியும் என்றால் மற்றவர்கள் நிலை என்ன?

கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடிய ஆசியர்கள் தண்டிக்கப்படவேண்டும். தேசத்திற்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திறமைசாலிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. அனு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம், சந்திராயன் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றோர்களை உறுவாக்கிய தமிழகம் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கால் தேசம் நல்ல தலைமுறைகளை இழந்துவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

தவறு செய்த ஆசிரியர்களை கண்டறிந்து தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பது பொது மக்களின் கருத்து.

கடுமையன தண்டனைகளே எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்கும். தண்டனைகளை தொலைக்காட்சி, அச்சு மற்றும் இணைய ஊடகங்கங்களின் மூலம் நாட்டு மக்கள் அறியச் செய்ய வேண்டும். அதுவே தேசபற்றுள்ளவர்களின் எதிர்பார்ப்பு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா?

Thursday, July 9, 2009

சவூதி ஏர்போர்ட்டிலிருந்து எளிதில் வெளியேற பயோமெட்ரிக் கார்டுகள் அறிமுகம்.

சர்வதேச விமான நிலையங்களில் குடியேற்று உள்நுழை / வெளியேற்றக் கவுண்டர்களில் நெடுநேரம் வரிசையில் காத்திருக்கும்

நடைமுறைக்கு சவூதி சர்வதேச விமான முனைமம் விரைவில் தீர்வுகாண உள்ளது. பயணிகளின் கைரேகை, கண்ரேகை மற்றும் இதர அடையாளங்களைக் கொண்ட தகவல் அடங்கிய விரைவு வெளியேற்ற மின்னணு வாசல்களில் பொருத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளால் உடனடியாக ஏர்போர்ட்டிலிருந்து வெளியேற/ உள்வர முடியும். பயணிகள் இத்தகைய அட்டைகளை விமானநிலையச் சிறப்பு வாசல்களில் பொருத்தப்பட்ட இயந்திரத்தில் காட்டி அதிவேகமாக தங்கள் குடியேற்ற நடைமுறைகளை முடித்துச் செல்லலாம்.


சவூதி உள்துறைஅமைச்சின் அறிவுறுத்தலின்படி உள்நாட்டு / வெளிநாடுக் குடிமக்களின் சுயவிபரங்களைக் கணினி மயமாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் குற்றவியல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் திட்டத்தின் ஒருபகுதியே இந்த விரைவு ஈ-கேட் அட்டை.

தற்போது சவூதி ஏர்போர்ட் மற்றும் குடியேற்ற அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல்களே புழக்கத்தில் உள்ளது. பயோமெட்ரிக் அட்டைமூலம் குடியேற்ற நடைமுறைகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். சவூதி உள்துறை அமைச்சக வட்டாரத் தகவலின்படி,பயோமெட்ரிக் அட்டை உயர்தர தொழில்நுட்பம் கொண்டதாகும்.இதன்மூலம் குறிப்பிட்டத் தகவல் தேடும்பணி ஓரிரு நொடிகளில் கிடைத்துவிடும் என்றார் சவூத் அல் கஹ்தானி என்ற அமைச்சகப் பணியாளர்.

பிரத்யேக மின்னணு வாசலைக் கடக்கும் பயணிகள்,தங்கள் குடியேற்ற/வெளியேற்ற விபரம் அடங்கிய அறிக்கையைப் பெறுவார்கள். இந்த புதிய சிஸ்டம் மூலமாக சுமார் 2000 கைரேகைகளைப் பதிவு செய்யும் சாதங்களையும் கையடக்க கைரேகை சாதனங்களையும் இணைத்துச் செயல்படும் என்றார். இதுபோன்ற ஐரிஸ் கண்ரேகை கேமராவில் பதிவு செய்யப்பட்ட விரைவு ஈ-கேட் அட்டைகள் துபாயில் கடந்த நான்காண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள். வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

சென்னையில் இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து... தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு... 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்...

கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து வட சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி.வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
வட சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு வாரம் 5 புகார்களும், புளியந்தோப்புக்கு 4 புகார்களும், எம்.கே.பி.நகர் போலீசுக்கு 3 புகார்களும், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் முறையே 4 புகார்களும், வருகிறது. குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.

Wednesday, July 8, 2009

முஸ்லிம் மாணவன் தாடி: மன்னிப்புக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ

டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.

இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.

அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு த.மு.மு.க உட்பட நாட்டிலுள்ள அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (6/7/2009) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.

மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

Tuesday, July 7, 2009

ஓரினச் சேர்க்கை: மத்திய அரசின் ஆதரவு போக்கை கண்டித்து தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு:
மத்திய அரசைக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ஐ நீக்க முயலும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து தமுமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 06,07,2009 மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யாசின். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி, மாநில மாணவரணிச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ''ஓரினச் சேர்க்கை செயலுக்கு வக்காலத்து வாங்கும் அவசியம் என்ன வந்தது? மேற்குலகை தனது புதிய வழிகாட்டியாக கொண்டு விளங்கும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு அநாகரீக பாதையில் செல்லும் அவசியம் என்ன? கோவாவிலும், சென்னை மகாபலிபுரத்திலும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த வக்கிர பேர்வழிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இங்கு வந்து தங்களது பாலியல் முறைகேடுகளுக்கு வடிகால் தேடும் போக்கு'' ஆகியன பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Monday, July 6, 2009

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக நாளை 06.07.2009 ல் தமுமுக ஆர்ப்பாட்டம்.


ஓரினச் சேர்க்கைக்கு எதிராக 149 அண்டுகளாக இருந்து வந்த ஐ.பி.சி 377வது சட்டப்பிரிவு செல்லாது என, டில்லி நீதி மன்றம் சமீபத்தில் தீர்பளித்தது.

இதனடிப்படையில் அருவருக்கத்தக்க இந்த ஓரினச் சேர்க்கையின் செயலை ஆதரித்து இந்திய அரசு ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்தால் இந்த அருவருக்கத்தக்க செயலுக்கு அனுமதி அளித்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விலக்களித்த 127வது நாடாக இந்திய இடம் பிடிக்கும்.

இறைவனின் படைப்பில் மனிதன் முதல் விலங்குள், தாவரங்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் அனைத்தும் அதற்கு அனுமதிக்கப்பட்ட இயற்கை வரையில் தான் தனது இல்லற சுகத்தையும் இனவிருத்தியையும் பெருக்குகின்றன குறிப்பாக தாவர இனங்களின் உற்பத்திகூட ஆண் ‍பெண் சேர்க்கை என்ற விதியின் படி‍யே விளைச்சல்கள்மேம்படுகின்றன.

இயற்கை விதி இவ்வாறு இருக்க மனித குலத்திற்கு எதிரான, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை ‍அளிக்கும் ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - இன்ஷா அல்லாஹ் 06.07.2009 அன்று மாலை 4.00 மணிக்கு – சென்னை சென்ரல் மெமோரியல் ஹால் அருகில் -

அனைவரும் வருக
அழைக்கிறது தமுமுக.